அருவி'யில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் யார் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

சமீபத்தில் வெளிவந்த 'அருவி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்திற்கு 4 ஸ்டார்களுக்கும் மேல் கொடுத்து பாராட்டி வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்காக இயக்குனர் அருண்பிரபு முதலில் பெரிய நடிகைகளை அணுகியதாகவும், பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் மறுத்த நிலையில் பின்னர் புதுமுகம் அதிதிபாலனை அறிமுகம் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அருண்பிரபு 'அருவி' கதையை நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர்களிடம் கூறியதாகவும், இந்த கதையில் மூவருமே நடிக்க விரும்பினாலும், ஏற்கனவே ஒருசில படங்களில் கமிட் ஆகியிருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடைசி பதினைந்து நிமிட காட்சிகளுக்காக உடல் எடையை குறைக்க எடுத்து கொள்ள வேண்டிய காலம் குறித்தும் மூவரும் யோசித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த படத்தின் கதை மூவரையும் கவர்ந்ததால், அருவி படம் தயாராகி வந்தபோது மூவருமே படத்தை குறித்து அவ்வப்போது இயக்குனர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

More News

பெரியபாண்டியனை சுட்டது சக ஆய்வாளர் முனிசேகரா? ராஜஸ்தான் போலீசார் பரபரப்பு தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்பட்ட பெரியபாண்டியன் அவர்களின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிலையில்

16 வருடங்களுக்கு பின் விஜய் இயக்குனரின் அடுத்த படம்

கடந்த 2001ஆம் ஆண்டு விஜய், ரிச்சா பாலோட், விவேக் உள்பட பலர் நடித்த வெற்றித்திரைப்படம் 'ஷாஜஹான்' இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அப்புலு,

5 முறை உலக சாம்பியன் வென்றவரை சந்தித்த பிரபுதேவா

மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறை சாற்றியவர் மேரிகோம்.

'பலூன்' இயக்குனர் சினிஷ் கலாய்த்தது யாரை தெரியுமா?

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திகில் படம் 'பலூன்' வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

அடுத்த ஆண்டு நானும் ஒரு இயக்குனர்: அரவிந்தசாமி

'தளபதி' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் அரவிந்தசாமி மிக குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார்