அடுத்தடுத்து திகில் பாதையில் செல்லும் நயன்தாரா

  • IndiaGlitz, [Tuesday,November 22 2016]

நயன்தாரா நடித்த முதல் திகில் படமான 'மாயா' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'டோரா' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சக்ரிடோலட்டி இயக்கத்தில் 'கொலையுதிர்க்காலம்' என்ற திகில் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு திகில் படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்' பட இயக்குனர் டிகே, ஒரு திகில் கதையை தயார் செய்துள்ளதாகவும் இந்த கதை நயன்தாராவை கவர்ந்ததால் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை டிகே அல்லது அவரது உதவியாளர்களில் ஒருவர் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க நயன்தாரா விரைவில் ஒப்பந்தம் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யா-விக்னேஷ் சிவனின் முதல் முயற்சி வெற்றி

'எஸ் 3' படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாள் அன்று தொடங்கியது என்பதையும் பார்த்தோம்.

அல்லு அர்ஜுனுக்கு இன்று கிடைத்த இரண்டாவது புரமோஷன்

தமிழ் ரசிகர்களுக்கு 'ருத்ரம்மாதேவி' படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் விரைவில் பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

'கவலை வேண்டாம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

ஜீவா நடிப்பில் டிகே இயக்கிய 'கவலை வேண்டாம்' வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன். அமலாபால்

இந்த ஆண்டின் மிக ஹாட் செய்தி விஜய்-அமலாபால் பிரிவாகத்தான் இருக்கும். 'தெய்வத்திருமகள்' படத்தின்போது...

விரைவில் வருகிறது கூகுள் கண். கேமராவாக மாறும் கண்கள்

கண்பார்வை குறைபாடு உள்ளவர்களின் குறையை போக்க கண்தானம் செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விழிப்புணர்வு...