'மாயா' போலவே செம த்ரில்லிங்.. நயன்தாராவின் 'கனெக்ட்' டீசர்

  • IndiaGlitz, [Friday,November 18 2022]

லேடி சூப்பர்ஸ்டார் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘கனெக்ட்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நயன்தாராவுடன் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர், சத்யராஜ் நடித்த இந்தப் படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படமான ’மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டீசரில் அமானுஷ்ய சக்தி உள்ள காட்சிகள் இருப்பது த்ரில்லை ஏற்படுத்தியுள்ளது.

’மாயா’ படம் போலவே இந்த படமும் செம த்ரில் கதை அம்சம் கொண்டது என்பது இந்த டீசரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் ரிசார்ட் கேவின் படத்தொகுப்பில் பிரித்வி சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் நயன்தாராவின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிறந்த நாளில் நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு: இயக்குனர் இந்த பிரபலமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீ முழுமை அடைந்துவிட்டாய்.. நயனுக்கு விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நயன்தாராவின்

'என்னை யாராவது கிள்ளுங்கள்”: லைகா டுவிட்டுக்கு விக்ரம் அளித்த பதில்!

'பொன்னியின் செல்வன்' குறித்து லைகா நிறுவனம் பதிவு செய்த டுவிட்டுக்கு 'என்னை யாராவது கிள்ளி இனி கனவல்ல என்று சொல்லுங்கள் என நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்: நடிகை பார்வதி நாயர் அறிக்கை

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கே இந்த நிலையா? பொங்கிய சீமான்

தம்பி விஜய் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலையா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கி எழுந்து அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.