2ஆம் பாகமாக உருவாகவுள்ள நயன்தாராவின் சூப்பர் ஹிட் படம்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

கோலிவுட் திரையுலகின் நாயகர்களான ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகை நயன்தாரா நடித்த வெற்றிப்படம் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சி தலைவராக நடித்த 'அறம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதை கோபி நயினார் தற்போது உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜனநாயக உரிமைகள் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் பாகத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் சேவை செய்ய போவதாக கூறியிருப்பதுடன் முடிவடைந்திருக்கும். இந்த நிலையில் 'அறம் 2' படத்தில் அவர் மக்கள் அமைப்பு அல்லது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரா, விஸ்வாசம், சைரா நரசிம்மரெட்டி, சிவகார்த்திகேயன் - ராஜேஷ் எம் படம் என பிசியாக இருக்கும் நயன்தாரா விரைவில் 'அறம் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அரசு உயரதிகாரியாக மாறிய நடிகை வரலட்சுமி

பிரபல நடிகை வரலட்சுமி நடித்துள்ள மாரி 2' படத்தில் அவருடைய கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'விஸ்வாசம்' படத்தில் திடீரென இணைந்த பிரபல நடிகர்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் ஆண்டனி படத்திற்கு உதவிய சகாயம் ஐ.ஏ.எஸ்

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் நிஜப்பெயர் கோமளவல்லியா? தீபா விளக்கம்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் வரலட்சுமியின் கேரக்டரான கோமளவல்லி என்ற கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓடும் பேருந்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி

துாத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற பகுதியை சேர்ந்த நயினார் - இலக்கியா தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது