'காதம்மா' கேரக்டராகவே மாறிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் கனவு நனவானதா?

  • IndiaGlitz, [Wednesday,September 25 2024]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’நானும் ரௌடிதான்’ என்ற படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் காதம்பரி என இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி நயன்தாராவை ’காதும்மா’ என்று செல்லமாக அழைப்பார். அந்த கதாபாத்திரத்தை தற்போது நயன்தாரா நிஜமாக்கியுள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் கனவு நனவாகியிருக்கிறது என்று தெரிகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பது மட்டுமின்றி, தற்போது கூட நான்கு படங்களில் நடித்து பிஸியாக உள்ளார் என்பதும் அறியப்படுகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இணைந்த நயன்தாரா, தன் குடும்பத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனக்கு காது குத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார். தனக்கு பிடித்த தோடுகளை தேர்வு செய்து, அதன் பின்னர் கடை ஊழியர்களிடம் காது குத்திக் கொண்டார்.

காது குத்திய போது நயன்தாராவின் காதில் ரத்தம் வந்தபோது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாரே பாடலை பாடி, க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்தார். வலது காதில் இரண்டு தோடுகள் குத்திய நிலையில், நயன்தாரா மிகவும் க்யூட்டாக இருப்பதாகவும், ’நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற ’காதும்மா’ கேரக்டருக்கு இப்போதுதான் அவர் பொருத்தமாக இருக்கிறார் என்றும், விக்னேஷ் சிவனின் கனவு நனவாகி இருக்கிறது என்றும், இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது.

மேலும், நயன்தாரா தனது வீடியோவிற்கு ’காதும்மா’ என்ற கேப்ஷனும் சேர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் ஒரே படத்தில் சூர்யா - விக்ரம்.. 3 பாகங்கள்.. ரூ.1000 கோடி பட்ஜெட்?

பாலாவின் 'பிதாமகன்' திரைப்படத்தில் ஏற்கனவே சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர்

விஜய் ஆண்டனிக்கு 4 நிமிடங்கள், சதீஷுக்கு 6 நிமிடங்கள்.. 2 வீடியோக்கள் வைரல்..!

நாளை கார்த்தியின் மெய்யழகன் உள்பட சில திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் இரண்டு படங்களின் முதல் சில நிமிட காட்சிகள் வெளியாகி, அந்த படங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்.. நன்றி சொன்ன கமல்ஹாசன்..!

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு, உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி.. இசைஞானியின் சூப்பர் அறிவிப்பு..!

பொதுவாக பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் தான் நடக்கின்றன என்ற நிலைமையில்,

மீண்டும் கார் ரேஸ் களத்தில் அஜித்.. உறுதி செய்த பிரபலங்கள்..!

நடிகர் அஜித் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.