close
Choose your channels

தடுப்பூசி போட்டு கொண்டது உண்மையா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா தரப்பு!

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் சென்று தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து திடீரென சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. நயன்தாராவுக்கு தடுப்பூசி போடும்போது ஊசி தெரியவில்லை என்றும், வெறும் விரல்களால் மட்டுமே ஊசி போடுவது போல் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாகவும் ஒரு சிலர் சந்தேகங்களை கிளப்பி விட்டனர்.

இந்த நிலையில் நயன்தாரா தரப்பில் இதற்கு விளக்கம் அளித்து புதிய புகைப்படம் ஒன்றை பதிவு வெளியிட்டுள்ளனர். அதில் நயன்தாராவின் கையில் ஊசி இறங்குவது மிகவும் தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புகைப்படம் உள்ளதாக நயன்தாரா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment