நயன்தாராவுக்கு இதுதான் முதல்முறை

  • IndiaGlitz, [Tuesday,May 03 2016]

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு கெட்டப்புகளில், பல லொகேஷன்களில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது இந்தியாவின் மிக அழகிய பகுதிகளில் ஒன்றாகிய காஷ்மீரில் 'இருமுகன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். காஷ்மீருப் மிக அழகிய பள்ளத்தாக்கு பகுதிகளில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது நயன்தாராவுக்கு இதுதான் முதல்முறையாம்.

காஷ்மீர் பகுதியில் இயக்குனர் ஆனந்த் சங்கர் சேசிங் காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாகவும், இதனை அடுத்து 'இருமுகன்' படக்குழு 'பாங்காக்' செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஷிபுதமீன்ஸ் தயாரித்து வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.