நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா! ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்?

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் தான் 'காமோஷி. பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள இந்த படத்தையும் 'கொலையுதிர்க்காலம்' படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் 'காமோஷி' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 'மே ரிலீஸ்' என விளம்பரம் செய்யப்பட்டு வரும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படமும் அதே மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே கதையில் நயன்தாராவும், தமன்னாவும் நடித்து ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் யாருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்பதை அறிய இருதரப்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

More News

சாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்!

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஓமக்குச்சி நரசிம்மன். 1946ஆம் ஆண்டு 'ஒளவையார்' என்ற படத்தில் அறிமுகமாகி

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கர் செய்த புதிய முயற்சி!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து குதித்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்!

மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கமல் மீது டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு: கிரிமினல் நடவடிக்கை எடுக்க மனு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்