17ஆம் நூற்றாண்டின் வீரமங்கை கேரக்டரில் நயன்தாரா? வைரலாகும் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீர மங்கை ஒருவரின் கேரக்டரில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக இந்திய திரையுலகில் சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வேலுநாச்சியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இது குறித்த பயிற்சிகளிலும் நயன்தாரா விரைவில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரமங்கை வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு இந்த படம் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


More News

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

'நீங்க அதெல்லாம் செய்விங்களா? அனிதாவை கலாய்க்கின்றாரா கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடலைபருப்பு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது என்பதும் அந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கேப்டன் பாலாஜி

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!!!

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவம் பயிலும் 64 வயது சாதனை மனிதர்… கூடவே இன்னொரு டிவிஸ்ட்!!!

ஒடிசா மாநிலத்தில் ஜெய்கிஷோர் பிரதான் என்பவர் 64 வயதில் மருத்துவம் படிக்கிறார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் அவரது இளைய மகளும் பல் மருத்துவம் படிக்கிறார்

ரஜினி, கமலுக்கு கூட்டம் வரும், ஆனால் ஓட்டு வராது: தமிழ் நடிகர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால்