மீண்டும் வரலாற்று திரைப்படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த ’சயிர நரசிம்ம ரெட்டி’ என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தாலும் கன்னடத்தில் அவர் ’சூப்பர்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் வரலாற்றுத் திரைப்படமான ’ராஜ வீர மடகாரி நாயகா’ என்ற படத்தில் நயன்தாரா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னட நடிகர் தர்ஷன் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் சுமலதா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும் அவற்றில் ஒருவர் தனுஷின் ’பொல்லாதவன்’ படத்தில் நடித்த ரம்யா என்றும், இன்னொரு நாயகியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார் அம்சலேகா இசையமைக்கும் இந்த படம் பி.எல்.வேணு என்பவர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தின் அடிப்படையில் படம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் முடிந்து விட்டதாகவும் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

கமலஹாசன் நடிக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும்

CAA சட்டத்திற்கான விவாதத்தில் தெலுங்கானா முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?!

இது போன்ற சட்டங்கள் எரிச்சலை வரவைக்கின்றன. இதனால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் குறைகிறது.

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..!

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதனால் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா கோரம்: டாய்லட் பேப்பருக்காக அடித்துக்கொண்ட வாடிக்கையாளர்கள் வைரலான வீடியோ!!!

கொரோனா மனித உயிர்களை எடுத்துக் கொள்வது மட்டுமின்றி அது ஏற்படுத்திய பீதியால் மனித நேயத்தையும்  கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர்களின் பரிதாப முடிவு

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மது அருந்தலாம் என்ற வதந்தியை நம்பி ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது