அம்மா கேரக்டரில் நடிக்க நயன்தாரா தயங்கினாரா? 'மாயா' இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,September 09 2015]

சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த மாபெரும் வெற்றிப்படமான 'தனி ஒருவன்' படத்தை அடுத்து அவர் நடித்துள்ள அடுத்த படமான 'மாயா' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'தனி ஒருவன்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இந்த படம் வெளிவருவதால் சரியான நேரத்தில் இந்த படம் வெளிவருவதாகவும், அதே நேரத்தில் மிகப்பெரிய எதிர்பார்பையும் இந்த படம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் அஸ்வின் ஒரு பேட்டியில் கூறியபோது, முதலில் தயாரிப்பாளர் பிரபுவுடன் இந்த படம் குறித்து ஆலோசனை செய்தபோது குறைந்த பட்ஜெட்டில் புதுமுக நடிகையை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்தான் இந்த முக்கிய கேரக்டருக்கு நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். ஆனால் இந்த படத்தின் அந்த முக்கிய கேரக்டர் ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதால், நயன்தாரா அந்த கேரக்டரில் நடிப்பாரா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. நான் தயங்கிக்கொண்டே நயன்தாராவிடம் கதையை கூறியபோது, அவருக்கு கதை பிடித்திருந்தாலும், நான் யோசித்து சொல்கிறேன் என்றுதான் முதலில் கூறினார்.

பின்னர் நயன்தாராவே என்னை அழைத்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏற்கனவே தான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருப்பதாகவும், இந்த படத்திற்கு கால்ஷீட் தேதிகளை ஒதுக்கவே தான் யோசித்து சொல்வதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்த படத்தில் நயன்தாரா பேயாக நடிக்கின்றாரா என்பதை இயக்குனர் அஸ்வின் சொல்ல மறுத்தார். ஆனால் இந்த படத்தில் அமைந்துள்ள 'மாயா' கேரக்டர் பேயின் பெயர்தான் என்று கூறப்படுவதால் அனேகமாக நயன்தாராவின் கேரக்டர் பேயாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

அட்லியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் ...

மணிரத்னம் படத்தின் தழுவலா 'விஜய் 59'?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

விஜய்யின் 'புலி' படத்தின் லேட்டஸ்ட் விபரங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து...

'ரஜினிமுருகன்' சென்சார் விபரங்கள்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் இன்று தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டது...

விஷால்-பாண்டியராஜ் படம் 50% முடிந்தது

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்த ''பாயும் புலி'' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...