ஒரே படத்தில் நயன்தாரா-தமன்னா

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்த 'நண்பேண்டா' படத்தில் தமன்னா ஒருசில காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.  ஆனால் முதல்முறையாக நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். அந்த படம் தான் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரமாண்டமாக தயாராகி வரும் 'சை ரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம்

சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடித்து வரும்  சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் தமன்னாவும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஐபிஎல் போட்டிகளில் ரெய்னாவுக்கு முதன்முதலாக  வந்த சோதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன், அதிக போட்டிகளில் விளையாடிவர், எந்த போட்டியையும் மிஸ் செய்யாதவர் ஆகிய பெருமைகளை கொண்டவர் சுரேஷ் ரெய்னா.

பிரதமருக்கு கமல் வீடியோ மூலம் விடுத்த கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கமல்ஹாசன் வீடியோவில் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பிரபல இயக்குனர்கள் கைது

நரேந்திரமோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிரபல இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

டாஸ்மாக்கையும் மூடுவீர்களா? ஐபிஎல் ரத்து குறித்து பிரபல நடிகர்

ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள். இதேபோல் டாஸ்மாக் கடைகளையும் மூடவும், அரசியல்வாதிகள் நடத்தி வரும் அனைத்து டிவி சேனல்களை மூடவும் போராடுவீர்களா?

காவிரி பிரச்சனை குறித்து சாம் பில்லிங்ஸ் பதிவு செய்த டுவீட்

சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து நாங்கள் வெளியேறும் நிலை எங்களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. சென்னை போட்டியை பார்க்க வந்த ரசிகர் காயம் அடைந்தது என் மனதை வேதனை அடைய செயுதுள்ளது.