close
Choose your channels

4 புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா: இரண்டு வருடங்களுக்கு பிஸி!

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ’அண்ணாத்த’ மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ’நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நயன்தாரா மேலும் 4 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் அதில் ஒரு திரைப்படத்தை வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்னேஷ் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், இன்னொரு திரைப்படத்தில் ’எலி’ இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் அபிஷேக் பிள்ளையின் ரெட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படத்தில் நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த 2 படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே தற்போது வந்துள்ள செய்திகளைப் பார்க்கும்போது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நயன்தாரா பிஸியாக இருப்பார் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment