நயன்தாராவின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர்?

  • IndiaGlitz, [Wednesday,December 28 2016]

தென்னிந்திய திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நாயகியாக நடித்து வரும் நயன்தாரா இன்றளவும் பிசியான நடிகையாக உள்ளார். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களின் கதை இவரது கேரக்டரை மையப்படுத்தியே உள்ளதால் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.
'டோரா' என்ற திகில் படம், 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடம், யுவன்ஷங்கர்ராஜா தயாரிக்கும் 'கொலையுதிர்க்காலம்' படத்தில் முக்கிய வேடம், மீஞ்சூர் கோபியின் 'அறம்' படத்தில் கலெக்டர் வேடம் என நயன்தாரா நடிக்கும் அனைத்து படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் ஆகும்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த பிரமாண்டமான படத்தில் நயன்தாரா, பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

உ.பியில் பயங்கர ரயில் விபத்து. 14 பெட்டிகள் கவிழ்ந்தன

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தின் ரூரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது...

கமல்-ரஜினி விசிட்டில் பிரபுவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

இளையதிலகம் பிரபுவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன்

'சென்னை 28' மூன்றாம் பாகத்தில் அஸ்வின். வெங்கட்பிரபு உறுதி

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டியதோடு...

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ்-ஆர்.பி.செளத்ரி புகார்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வந்த 'மொட்டசிவா கெட்டசிவா'...

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது எப்படி?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி...