த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. மன்சூர் அலிகான் மீது அதிரடி நடவடிக்கை..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், உட்பட பல நடிகைகளும் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், குஷ்பு உட்பட பல அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பதால் தனக்கு மேல் உள்ள நிர்வாகிகளிடம் கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஐசிசி 509பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இது போன்ற கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

பிரதீப் மீண்டும் உள்ளே வருகிறாரா? பிக்பாஸ் அறிவிப்பால் அதிர்ச்சியாகும் போட்டியாளர்கள்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எலிமினேஷன் செய்யப்பட்டவர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ்

ஸ்மால் பாஸ் ஹவுஸ்-க்கு 6 பேரை அனுப்பிய தினேஷ்: இந்த 2 பேர் லிஸ்ட்லேயே இல்லையே..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்ற ஒரு புதிய வீடு இருக்கிறது என்பதும் இந்த ஹவுஸில் சில போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

காருக்குள் மர்மமான முறையில் மரணம் அடைந்த பிரபல நடிகர்.. போலீஸ் விசாரணை..!

'அய்யப்பனும் கோஷியும்' உள்பட ஒரு சில மலையாள படங்களிலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஒருவர் மர்மமான முறையில் காரில் மரணம் அடைந்திருந்தது திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி

விஜய்யின் 'லியோ' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கேப்டன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசமா? ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி..!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு  செயற்கை சுவாசம் அளித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கும் தேமுதிக கட்சி தொண்டர்களுக்கும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.