பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன்! வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச அளவில் அறிமுகமாகி மூன்று வகை போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்தார் என்பதும் தெரிந்ததே

இதனை அடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பழனி முருகன் கோவிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

இந்திய அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்தால் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து கொள்வதாக நேர்த்திக்கடன் நேர்ந்து இருந்ததாகவும், இதனையடுத்து தற்போது அந்த நேர்த்திக்கடனை நடராஜன் செலுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா தனுஷின் அடுத்த படம்?

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஓடிடியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருந்த நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய

கார்த்தியின் 'சுல்தான்' மாஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவரும் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட பெரும்பாலான போஸ்ட் புரடொக்சன்ஸ்

சிம்பு-நயன்தாராவை மீண்டும் இணைத்து வைக்க பிரபல இயக்குனர் முயற்சி?

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து 'வல்லவன்' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் இருவரும்

பிரபல நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட ஒளிப்பதிவாளர்!

தனுஷ் பட ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தை அணுகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினியை திடீரென நேரில் சந்தித்த சிறுத்தை சிவா: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் திடீரென படக்குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.