நாசர் மகனை மெர்சலாக்கிய 'மெர்சல்' திரைப்படம்

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் செய்திகள் தினந்தோறும் சமூக இணையதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவரும் பிரபல நடிகருமான நாசர் மகன் ஃபைசல் தனது காரின் பின்புற கண்ணாடியில் 'மெர்சல்' படத்தின் டைட்டில் லோகோவை வரைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல் நாசரின் சமூக இணையதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சமீபத்தில் குணமாகியதும், அவரை விஜய் சமீபத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகராகிய ஃபைசல் தனது காரில் மெர்சல் படத்தின் லோகோவை வரைந்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

போதை பொருள் விற்பனையில் பிரபல நடிகை: விசாரணைக்கு வருமாறு காவல்துறை நோட்டீஸ்

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்கள் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வருத்தத்துடன் கூறிய செய்தியை நேற்று பார்த்தோம்

ஆன்லைன் ரம்மி விளையாடினால் கைது! அரசின் அதிரடி அறிவிப்பு

கடந்த சில வருடங்களாகவே ஆன்லைனில் ரம்மி விளையாடும் வழக்கம் பொதுமக்களுக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளம்பரத்தில் பிரபல நடிகர் ஒருவரே நடித்துள்ளதால் இந்த பழக்கம் மிக அதிகமானவர்களிடம் பரவியுள்ளது...

நயன்தாராவுடன் மனவருத்தம் ஏற்பட்டது உண்மைதான்: மோகன் ராஜா

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கும் என் எதிர்ப்பு இருக்கும்! கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, நிருபர் ஒருவர் உங்கள் நண்பர் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்களுடைய ஆதரவு இருக்குமா? என்று கேட்டார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூகத்துக்கு கூறுவது என்ன? கமல் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புகார்  வந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல் தனது பேட்டியில் கூறியதாவது...