சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

  • IndiaGlitz, [Thursday,November 07 2019]

நடிகர் சங்கம் சரியான வகையில் செயல்படவில்லை என்ற காரணத்தை காட்டி, அச்சங்கத்திற்கு இன்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

சிறப்பு அதிகாரிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என்று கூறிய நடிகர் சங்க தலைவர் நாசர், இந்த பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்திப்போம் என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் சட்ட ரீதியாக, ஜனநாயக பூர்வமாக தேர்தலை எதிர்கொண்டோம் என்றும், இப்போதும் சட்ட ரீதியாக தான் செயல்பட்டு வருகின்றோம் என்றும் நாசர் கூறினார்.

சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிர்த்து தெரிவித்து நாளை நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், 4 பேர் கொடுத்த புகாரின் பேரில் 3,000 பேர் கொண்ட சங்கத்திற்கு எதிராக அதிகாரியை நியமித்துள்ளனர் என்றும், ராதாரவி பதவிகாலத்தில் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது, ஆனால் அப்போது, அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என்றும் பூச்சி முருகன் தெரிவித்தார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சங்கம் செயல்படவில்லை என கூறுவது தவறு என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
 

More News

கோட்டையை எட்டி பார்க்கும் கமல்ஹாசன்: ஷங்கரின் வித்தியாசமான வாழ்த்து!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளையும் சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

காற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு

ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

திருமணமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த மாடல் அழகி ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு நஷ்ட ஈடாக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

உலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்!

ஒருசில மருத்துவமனைகளில் உள்ளே சென்றாலே ஏன் இங்கு வந்தோம் என்ற அளவுக்கு கொடூரமாக இருக்கும். ஆனால் சில மருத்துவமனைகளில் நுழைந்தால் மருத்துவமனை போல் இல்லாமல் ஒரு ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கும்.

64 நாட்கள் தொடர் படப்பிடிப்பு: முடிவுக்கு வந்த தனுஷின் அடுத்த படம்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்