நாசர் குடும்பத்திற்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் ரம்ஜான். எப்படி?

  • IndiaGlitz, [Wednesday,July 06 2016]

பிரபல நடிகர் நாசர் தனது குடும்பத்துடன் நாளை ரம்ஜான் திருநாளை கொண்டாடவுள்ளார். அவருக்கு இப்பொழுது முதலே திரையுலகினர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாசரின் மனைவி கமீலா, இந்த ஆண்டு ரம்ஜான் தங்கள் குடும்பத்திற்கு சிறப்பு ரம்ஜான் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நாசர் ரம்ஜான் தினத்தன்று படப்பிடிப்பு அல்லது வேறு வேலை காரணமாக வெளியூரில் இருப்பார் ஆனால் இந்த ஆண்டு அவர் சென்னையில் உள்ளராம். அதேபோல் அவர் நடிகர் சங்க தலைவர் பதவியை பொறுப்பேற்றவுடன் கொண்டாடும் முதல் ரம்ஜான் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாசரின் மூத்த மகன் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தற்போது கிட்டத்தட்ட பூரண குணம் அடைந்துவிட்டாராம். மேலும் நாசரின் இரண்டாவது மகன் லூபுதின் இதுவரை சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது 'பறந்து செல்ல வா' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ளார்.
அதேபோல் நாசர்-கமீலாவின் மூன்றாவது மகன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்காக குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். எனவே இந்த ஆண்டு ரம்ஜான் தங்கள் குடும்பத்திற்கு சிறப்பு ரம்ஜான் என்று கமீலா நாசர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.