close
Choose your channels

அரவிந்தசாமியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

Monday, December 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’துருவங்கள் பதினாறு’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். ரகுமான் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதனை அடுத்து நரகாசுரன் என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நாட்களுக்கு முன்னரே அதாவது 41 நாட்களில் இயக்குனர் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

அரவிந்தசாமி ஸ்ரேயா சரண் சந்தீப் கிஷான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த 2017ஆம் ஆண்டே வெளிவர வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் திடீரென இந்த படத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக அந்த படம் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படம் ரிலீசாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது அருண்விஜய் நடித்து வரும் ’மாபியா’ என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படமும் வெகு விரைவில் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment