இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை ரஜினி சந்தித்தபோது, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு வாலிபர் 'நீங்க யாரு' என்று கேட்க அதற்கு ரஜினி 'நான் தான் ரஜினிகாந்த் என்று கூறினார். அதன்பின்னர் ரஜினி சிரித்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினி அந்த இளைஞரிடம் கூறியதை வைத்து 'நான்தாப்பாரஜினிகாந்த்' என்ற ஹேஷ்டாக் தற்போது டுவிட்டரில் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. நெட்டிசன்கள் ரஜினிகாந்த் குறித்து பல மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி எதிர்ப்பாளர்களும் இந்த விஷயத்தை பெரிதாக்கி வருகின்றனர்.

தூத்துகுடிக்கு இதுவரை சென்ற அரசியல்வாதிகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய கூட்டம், வரவேற்பு ஆகியவை ரஜினிக்கு கிடைத்தது. இருப்பினும் ஒரே ஒரு வாலிபர் கேட்ட 'யாரு நீங்க' என்ற கேள்வி மட்டும் சமூக வலைத்தளத்தில் பெரிதுபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.' யாரு நீங்க' என்று அந்த வாலிபர் ரஜினியிடம் கேட்ட கேள்விக்கு மக்கள் வரும் தேர்தலில் பதிலளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை' இந்த நிகழ்ச்சியை கலாய்த்து

யார் நீங்க? ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துகுடி இளைஞர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும்

'காலா' படத்திற்கு தடை: கொந்தளித்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினியின் குரல் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்ததால் கன்னட அமைப்புகள்

போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்

தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது

ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: