7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி நாயகி

  • IndiaGlitz, [Tuesday,May 08 2018]

தளபதி விஜய் நடித்த 'புலி' மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்கள் உள்பட பல படங்களில் நடித்த வளர்ந்து வரும் நடிகையான நந்திதா, முதல்முறையாக 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் பாலா உள்பட பல முன்னணி இயக்குகளிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதா ராஜ்புட் என்பவர் இயக்கவுள்ள 'நர்மதா' என்ற படத்தில் நந்திதா 7 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கவுள்ளதாகவும், நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படம், அம்மா-மகன் பாசத்தை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்டது என்றும் இயக்குனர் கீதா தெரிவித்துள்ளார். 

முதல்முறையாக அம்மா கேரக்டரில் அதிலும் 7 வயது குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடிக்க முதலில் நந்திதா தயங்கியதாகவும், பின்னர் இந்த கேரக்டரை முழுவதும் புரிந்து கொண்ட பின்னர் இந்த படத்தில் நடிக்க நந்திதா சம்மதம் தெரிவித்ததாகவும் கீதா கூறியுள்ளார்.

நந்திதாவின் மகனாக ரெனேஷ் என்ற சிறுவன் நடிக்கவுள்ளதாகவும் மேலும் விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

More News

அடுத்த கட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா'

சிவகார்த்திகேயனின் சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதிலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ரஜினிக்கு ரசிகையாக மாறுகிறாரா ஜோதிகா?

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

'காலா' அமெரிக்க ரிலீஸ் குறித்த புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் பாடல்கள் நாளை சென்னையில் வெளியாகவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில்

கஸ்தூரிராஜாவின் திகில் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்

கிராமப்புறத்து திரைப்படங்களை அதிகம் இயக்கிய இயக்குனர் கஸ்தூரிராஜா முதல்முறையாக திகில் படம் ஒன்றை இயக்கவுள்ளார். பாண்டிமுனி' என்ற டைட்டிலில் உருவாகும்

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவம்: சென்னை வாலிபர் பரிதாப மரணம்

சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி நேற்று மாலை பர்காம் மாவட்டத்தின் வழியே காரில் சென்று கொண்டிருந்தார்.