சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் விஜய், விஜய்சேதுபதி பட நாயகி!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். மேலும் இன்று சிம்புவின் ட்விட்டர் தளத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் ஆயுத பூஜை தினத்தன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சிம்பு-சுசீந்திரன் இணையும் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி படத்தில் நடித்த முன்னணி நடிகை ஒருவர் சிம்புவுக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

விஜய் நடித்த புலி, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் சிம்புவின் தங்கையாக சுசீந்திரன் படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் மோஷன் போஸ்டரில் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் திரு ஒளிப்பதிவில் தமன் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கவுண்டமணி!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி திடீரென உடல்நலக் குறைவாக இருப்பதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

நயன்தாரா, காஜல் அகர்வால், வாணிபோஜன்: நவம்பரில் நட்சத்திர கொண்டாட்டம்!

தமிழகத்தில் இன்னும் திரையரங்கங்கள் திறக்காத நிலையில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்

பாரபட்சமானவர் அர்ச்சனா: பாலாஜியின் அழுத்தமான குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக  நுழைந்து ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்த 15 பேர்களை முந்தி வருகிறார் அர்ச்சனா. ஆனால் அதே நேரத்தில் அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்து

கொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர்!!! 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி!!!

கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் அதிக முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில் திட்டங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து உள்ளார்.

சூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்!!!

சூரியனில் பூமியின் அளவைவிட பெரிய கரும்புள்ளி ஒன்று புதிதாக உருவாகி இருப்பதை சார்ஜா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.