பேக் பண்ணிய நமீதா! அடுத்து வெளியேற போவது யார்?

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, கலகலப்பு மற்றும் கொஞ்சம் சீரியஸ் கலந்து சென்று கொண்டிருந்தாலும் இன்றைய தமிழக மக்களின் ஹாட் டாக் இந்த நிகழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த 15 பேர்களில் இதுவரை 5 பேர் வெளியேறி உள்ளனர். ஸ்ரீ உடல்நலமில்லாமலும், பரணி விதிகளை மீறியதாலும், அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி ஆகியோர் போதிய வாக்குகளை வாங்காததாலும் வெளியேறி உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்து வெளியேற போகும் லிஸ்ட் தயாரிக்கும் பணி நேற்றைய நிகழ்ச்சியில் நடந்தது. கணேஷ் வெங்கட்ராமன், ஓவியா, மற்றும் நமீதா ஆகியோர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஓவியாவுக்கு நேயர்கள் ஆதரவு மிக அதிகமாக இருப்பதால் அவர் வெளியேற வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் நமீதா அல்லது கணேஷ் வெளியேற வாய்பு உள்ளதாகவும், கணேஷூக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றைய புரமோ வீடியோவில் நமீதாவிடம் ஓவியா 'பேக் செய்துவிட்டீர்களா? என்று கேட்க அதற்கு நமீதா 'ஆம்' என்று கூறுகிறார். ஆனால் நீங்கள் வெளியேற மாட்டீர்கள்' என்று ஓவியா சிரித்து கொண்டே சொல்வதாக அமைந்துள்ளது.