நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை.. கணவர் வீரேந்திர சவுத்ரி ஆதங்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

நடிகை நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அவரை கிளாமருக்காக கமர்சியலாக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்றும் அவரது நடிப்பு திறமையை யாரும் வெளிப்படுத்தவில்லை என்றும் நமிதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

’பவ் பவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் வீரேந்திர சவுத்ரி, அதில் நமிதா முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும், கிளாமர் மட்டுமின்றி ஒரு நல்ல நடிப்புத் திறமை உள்ள நமிதாவை இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமிதா, ‘பார்வை திறன் குன்றிய ஒருவர் நாயின் துணையுடன் கார் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதே போன்ற ஒரு காட்சி தனது படத்திலும் வருவதாகவும் தனது படம் விலங்குகள் நல பிரியர்களுக்கு உகந்த படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த படத்தை தங்கள் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் நமிதா கூறினார். இந்த படம் ஒரு வித்தியாசமான கான்செப்ட்டை கொண்டது என்றும் என் மனதிற்கு மிகவும் உகந்த படமாக அமைந்துள்ளது என்றும் நமீதா தெரிவித்துள்ளார்.