பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் 3வது முறையாக இணையும் நலன் குமாரசாமி

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் ஆகிய பரிணாமங்களில் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வருபவர் நலன்குமாரசாமி. இவர் இயக்கிய 'சூது கவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்' ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தவர் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா என்பது அறிந்ததே. இந்த நிலையில் இதே தயாரிப்பு நிறுவனத்திற்காக மேலும் ஒரு படத்தை நலன்குமாரசாமி இயக்கவுள்ளார்.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நலன்குமாரசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்த 'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் 'கஜினிகாந்த்' ஆகிய மூன்று படங்களை இயக்குனர் சந்தோஷ் இயக்கியுள்ள நிலையில் தற்போது நலன்குமாரசாமியும் இந்நிறுவனத்திற்காக மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஸ்வரூபம் 2' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு மிகப்பெரிய தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா சாயிஷா?

விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தில் அறிமுகமான சாயிஷா, அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமானார்.

இதற்காகத்தான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை: சமந்தா

பிரபல நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றே கூறலாம்.

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு தனது 100வது தயாரிப்பு திரைப்படமாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை

மும்தாஜை அழவைத்த ஷாரிக்: பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் டுவிஸ்ட்

பிக்பாஸ் முதல் பாகம் போல் இரண்டாம் பாகத்தையும் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் பல்வேறு முயற்சி செய்தும் 37 நாட்களாக எந்தவித பலன் கிடைக்கவில்லை