மலேசியாவில் நட்சத்திர கலைவிழா: கமல், ரஜினி கலந்து கொள்கின்றனர்.

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் இணைந்து, வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நட்சத்திர விழா ஒன்றை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக நடத்தப்படவுள்ள இந்த நட்சத்திர கலை விழாவில் ரஜினி, கமல் உள்பட 100க்கும் மேற்பட்ட நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இந்த நட்சத்திர கலைவிழாவின் ஒரு பகுதியாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.  சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமையிலான ஆறு கிரிக்கெட் அணிகளுக்குள் போட்டிகள் நடைபெறும், அதேபோல் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. அதில் மலேசிய நடிகர்கள் ஒர் அணியிலும் தமிழ் சினிமா நடிகர்கள் ஒர் அணியிலும் பிரிந்து மோதவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியை மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது

இந்த நட்சத்திர கலைவிழா வின் அறிமுக விழா சமீபத்தில் மலேசியாவில் உள்ள மலேசிய புக்கிஜாலி அரங்கில் நடந்தது. இந்த விழாவில் மலேசிய விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன், முதல் டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன், உள்பட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.

மேலும் நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை மலேசிய பிரதமர் ஏற்றுள்ளதால் அவருடைய தலைமையில் மலேசிய புக்கிஜாலி அரங்கில் இவ்விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவை எதிர்த்து பாஜக போராட்டமா? திடீர் போலீஸ் பாதுகாப்பு

சமீபத்தில் சிம்பு பண மதிப்பிழப்பு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே. 'தட்றோம் தூக்றோம்' என்று தொடங்கும் இந்த பாடலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட

பத்மாவதி' படத்திற்கு துபாயில் இருந்து நிதி வந்ததா? சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு படக்குழுவினர் பதில்

ரஜபுத்திர ராணி பத்மாவதி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவதி' திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்: மம்தாவுக்கு நன்றி கூறிய கமல்

கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார்.

அறம்' படத்தை இதற்காகத்தான் பார்த்தேன்: தொல்.திருமாவளவன் பேட்டி

அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதற்காகவே இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறிய திருமாவளவன் படம் குறித்து கூறியதாவது:

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.