குழந்தை சுர்ஜித் நிலை குறித்து உள்ளூர்க்காரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சூர்ஜித் இந்த குழந்தை, வெள்ளி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த குழந்தையை வெளியே எடுக்க மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். 

குழியில் விழுந்து 65 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிய நிலையில் உணவு, தண்ணீரின்றி அந்த குழந்தை எப்படி உயிர் வாழும் என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்தாலும், மீட்புக் குழுவினரின் தீவிர முயற்சியின் காரணமாக குழந்தை இன்னும் உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாக லேசான நம்பிக்கையில் அனைவரும் சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த ஒருவர் முகநூலில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குழந்தை இறந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டதாகவும், மீடியா மற்றும் அதிகாரிகள் பொய் கூறி வருவதாகவும், குழந்தை மீது மண் மூடி விட்டதாகவும், வெறும் கை மட்டுமே தெரிவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தகவல் உண்மையாக இருக்கக்கூடாது என்று பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். எப்படியாவது குழந்தையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.