'சர்கார்' உடன் தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்துடன் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', விஜய் ஆண்டனியின் 'திமிறு பிடிச்சவன்' மற்றும் ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளி ரேஸில் சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும்

'நாடோடிகள்' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இல்லை என்றாலும் முதல் பாக படத்தின் பாதிப்பு இந்த படத்தில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகுமார் ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் பரணி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை எஸ்.நந்தகோபால் தயாரித்து வருகிறார்.

More News

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும்: பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'மீ டூ' பிரச்சனையால் படத்தில் இருந்து விலகிய '2.0' பட நடிகர்

உலகம் முழுவதும் 'மீ டூ' என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் உள்பட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இத்தனை வருடம் மெளனமாக இருந்தது ஏன்? சின்மயி விளக்கம்

பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒருசிலர் சின்மயி இதனை விளம்பரத்திற்காக கூறுவதாகவும்,

வைரமுத்துவை சின்மயி திருமணத்திற்கு அழைத்தது ஏன்? பெண் பத்திரிகையாளர் விளக்கம்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயியை நோக்கி ஒருசிலர் கேட்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். ஒன்று இத்தனை வருடங்களாக சின்மயி இந்த விஷயத்தை ஏன் வெளியே கூறவில்லை.