காவிரிக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்: நாசர், பொன்வண்ணன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,April 01 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சங்கமும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் தேதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து , நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

திரைத்துறை ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பம் போல ஒற்றுமையாக இருந்தது. அது டிஜிட்டலாக மாறிய பிறகு, பல பிரச்சினைகள் வந்துவிட்டன. திரையுலகினர், திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் ஆகிய 3 தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசினால் மட்டுமே இப்பிரச்சினை தீரும்.

திரைத்துறை நன்மை கருதி, தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. இப்பிரச்சினையில் நடிகர் சங்கத்திடமும் தயாரிப்பாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதுகுறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது பெரிய அளவில் 2 போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் ஒன்று, ஸ்டெர்லைட் பிரச்சினை. இதை தூத்துக்குடிக்கான பிரச்சினையாக பார்க்காமல் தமிழகத்துக்கான பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் நடத்தும் போராட்டத்துக்கும் நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. இந்த 2 பிரச்சினைகளையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களோடு திரையுலகமும் இணைந்து போராட திட்டமிட்டுள்ளது.

விரைவில் அரசிடம் அனுமதி பெற்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அது ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டமாக இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

More News

விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு டிராபிக் ராமசாமி உதவியா?

பிரபல சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி நடித்துள்ளார்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சூப்பர் கேரக்டரில் விஜய்சேதுபதி

முதல்படமான 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படமான 'சூப்பர் டீலக்ஸ்'

குதிரைக்கு தெரியுமா காவிரி பிரச்சனை? மெரினாவில் ஏமாந்த போலீசார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த போதிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடத்த வேண்டும் என்று முகநூல் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர்.

சென்னையில் சிஎஸ்கே போட்டிகான டிக்கெட்டுக்கள் எப்போது கிடைக்கும்

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கவுள்ளதால்