close
Choose your channels

நடிகர் சங்கத்தின் மற்றொரு மகத்தான உதவி

Monday, March 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கொண்ட இளையதலைமுறை நடிகர்கள் நடிகர்களுக்கு மட்டுமின்றி சமுதாய சேவைகளையும், பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.


குறிப்பாக சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியபோது களத்தில் இறங்கி மீட்புப்பணிகள் செய்தது முதல் சமீபத்தில் பாலன் என்ற விவசாயியின் டிராக்டரை வங்கி ஒன்று பறிமுதல் செய்தபோது அவருக்கு நிதியுதவி வழங்கியது வரை பல்வேறு உதவிகளை நடிகர் சங்கமும், நடிகர்களும் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் பகுதியில் அழகர் என்ற விவசாயி பணநெருக்கடி காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பமே தவித்து நிற்கும் நிலையில் நடிகர் சங்கம் அழகர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது. நடிகர் சங்கத்தின் இந்த பணி தொடர வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment