close
Choose your channels

தமிழ் திரையுலகில் நடிகர்களே இல்லாத முதல் தமிழ் படம்

Monday, October 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் ஜோதிகா நடித்த 'சினேகிதியே' திரைப்படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே ஆண் பாத்திரங்கள் இடம்பெற்ற படமாக இருந்த நிலையில் நடிகர்களே இல்லாத அதாவது ஆண் கதாபாத்திரங்கள் இல்லாத முதல் தமிழ் படம் என்ற பெருமையை 'திரைக்கு வராத கதை' என்ற திரைப்படம் பெற்றுள்ளது.
நதியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த இந்த படத்தில் இனியா, ஈடன், கோவைசரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் எடுக்கும் த்ரில் காட்சிகள் உண்மையாகவே நடக்கின்றது. இதனால் ஏற்படும் விளைவுகளை அந்த மாணவிகள் எப்படி சந்தித்தனர் என்பதுதான் கதை.
M.G.குமாரின் இசையில், அரோல் கொரோலியின் பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மலையாளத்தில் மம்பட்டி, மோகன்லால் உள்பட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கிய துளசிதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த 30ஆம் தேதி வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment