'லியோ'வில் நடித்த அனுபவம்.. மிஷ்கினின் நெகிழ்ச்சியான தகவல்..!

  • IndiaGlitz, [Monday,February 27 2023]

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் தனது அனுபவங்களை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ள நிலையில் அந்த தகவல் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ’. இந்த படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய வில்லன்கள் ஆக நடித்து வருகிறார்கள் என்றும் அது மட்டும் இன்றி ஆக்சன் கிங் அர்ஜுனும் ஒரு முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. விஜய் படத்தில் நான்கு பிரபலங்கள் வில்லன்களாக நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். என்னுடைய அருமையான சகோதரர் விஜய்யுடன் இணைந்து நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவருடன் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் அவருடைய எளிமை கருணை மற்றும் அன்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது என்றும் தெரிவித்தார். மேலும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திருப்புகிறேன். மைனஸ் 12 டிகிரி யில் 500 பேர் கொண்ட ’லியோ’ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் மிகச் சிறப்பாக ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருக்கிறார். என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனை போல் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷமடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

என்னுடைய முதல் முயற்சி.. நடிகை ஷாலு ஷம்முவின் வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு ஜிம்மில் தான் முதல் முயற்சி எடுத்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

படப்பிடிப்பு முடியும் முன்பே இத்தனை கோடி பிசினஸ் ஆகிவிட்டதா 'லியோ'?  முழு விபரங்கள்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படத்தின் பிசினஸ் சுமார் ரூ.400 கோடி அளவு

கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அமைச்சர் மற்றும் மேயர் ப்ரியா.. என்ன காரணம்?

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் ப்ரியா அழைப்பு விடுத்துள்ளனர். 

நடிகைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது என சட்டம் கொண்டு வரவேண்டும்: தமிழ் நடிகை கோரிக்கை..!

நடிகைகளை பொது இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ் நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திரைப்படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் தொழிலதிபர் தான்.. 'பிச்சைக்காரன்' நடிகையின் சக்சஸ் ஸ்டோரி..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில் தொழிலதிபர் கேரக்டரில் நடித்த நடிகை நிஜத்திலும் ஒரு தொழிலதிபர் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.