'சவரக்கத்தி' படத்திற்காக மிஷ்கின் எடுத்துள்ள புதிய முயற்சி

  • IndiaGlitz, [Thursday,August 04 2016]

பிரபல இயக்குனர் மிஷ்கின் ஒரு நல்ல இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக இதுவரை தன்னை மெருகேற்றி கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து தயாரித்து விரைவில் வெளியாகவுள்ள 'சவரக்கத்தி' படத்திற்காக ஒரு பாடலை எழுதி அந்த பாடலை அவரே பாடும் புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
இந்த பாடல் முடிதிருத்தும் பார்பர் சகோதரர்களின் பெருமையை கூறும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு. அரோல் கரோலியின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் 'தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் கத்தி ஈடாகுமா' என்று தொடங்குகிறது.
மனிதனை மனிதன் அழிக்க எத்தனையோ கத்திகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மனிதனை அழகு செய்ய வைக்கும் சவரக்கத்தி பாடலை சம்பர்ப்பிதல் மகிழ்ச்சி அடைவதாக இந்த படத்தின் குழுவினர் கூறியுள்ளனர். இன்று இந்த பாடல் யூடியூபில் வெளியாகவுள்ளது. இந்திய வரலாற்றில் பார்பர் சகோதரர்களுக்காக யூடியூபில் வெளியிடப்படும் முதல் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராம், பூர்ணா, மிஷ்கின் நடித்துள்ள இந்த படத்தை மிஷ்கினின் சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள்ளார்.