'நீ ஒரு பொறுக்கிடா? விஷாலை கடுமையாக விமர்சனம் செய்த மிஷ்கின்

‘துப்பறிவாளன் 2’ படத்தினால் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதும் பின்னர் அந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதும், அதன்பின்னர் இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், விஷாலை ‘நீ ஒரு பொறுக்கிடா’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் இந்த விழாவில் மேலும் பேசியதாவது:

ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு கதையை எழுதும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுவார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அவ்வாறு எனது உயிரை கொடுத்து எழுதிய கதைகளில் ஒன்றுதான் துப்பறிவாளன். விஷாலுக்காகத்தான் அந்த கதையை எழுதினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன் விஷாலின் மூன்று படங்கள் பிளாப்

என் நிஜ சகோதரனை கூட அந்தளவுக்கு பாசத்துடன் பார்த்தது இல்லை. நான் அவனை அப்படி பார்த்து கொண்டேன். அவனுக்காக இரண்டாவதாக ஒரு கதை எழுதினேன். அந்த கதையை கேட்டு என்னை கட்டிப்பிடித்து, நானே தயாரிக்கிறேன் என்று கூறினான். ஆனால் அந்த கதையை பாபி என்ற தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாக கூறினேன். அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு 20 கோடி வரை பட்ஜெட் தேவைப்படும். நீயே கடனில் இருக்கிறாய், உன்னால் முடியாது என்றேன். ஆனால் நான் தான் தயாரிப்பேன் என்று முரண்டு பிடித்தான். அப்போது ஆரம்பித்தது எனக்கு தலைவலி. நான் திரைக்கதை எழுத ரூ.7.5 லட்சம் வாங்கினேன். ஆனால் பத்திரிக்கை செய்தியில் ரூ.35 லட்சம் வாங்கியதாக போட்டார்கள். அதை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதேபோல் இதுவரை ரூ.15 கோடி செலவு செய்ததாக சொல்கிறான். அவ்வளவும் பொய். வெறும் ஐந்து கோடி மட்டுமே செலவாகியுள்ளது.

8 மாதம் நான் எழுதிய கதைய வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி விட்டு அவன் கையில் தூக்கி கொடுத்தேன். இப்போது என்னைப் பற்றி தவறாக பேசுகிறான். கதையை பற்றி உனக்கு எனக்கு தெரியும். நீ ஒரு பொறுக்கி பையன் டா. 9 மணிக்கு தேர்தலில் நாமினேஷன் செய்த பொறுக்கிடா நீ. நீ என்ன பெரிய எம்.ஜி.ஆரா, இல்லை கலைஞரா? இந்த சமூகம் உன்னை பார்த்து கொண்டிருக்கிறது. என்ன செய்தாய் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு. நீ எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்று உன் குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, சகோதரனிடம் கேட்டுபார், அவர்கள் சொல்வார்கள் என்னைப்பற்றி. நான் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேள், அவர்கள் சொல்வார்கள்.

ரமணா, நந்தா உன்னை நடுரோட்டில் நிற்க வைப்பார்கள் என்றேன், நடந்துவிட்டது. படம் நிற்க காரணமும் அது தான். என் தாயை பற்றி தவறாக பேசினான். இனி அவனை விட மாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருவன், அவனை பத்திரமாக பார்த்து கொண்டேன். இனி அவனிடமிருந்து தமிழ்நாட்டை நான் பத்திரமாக பார்க்க வேண்டும். யார் நீ, எங்கிருந்து வந்தாய், தமிழ்நாட்டில் நீ தான் காப்பாற்ற வந்தாயா, ஏன் இங்கு ஆட்கள் இல்லையா. இது ஒரு தமிழனின் கோபம். தம்பி விஷால் உனக்கு இருக்கு ஆப்பு. இப்போது தான் ஆரம்பமும், இனி நீ தூங்கவே முடியாது. உன் பக்கம் தர்மம் இருந்தால் வா குருஷேத்திற்கு போருக்கு, வா போரிடலாம். நன்றி என்றார்.

மிஷ்கினின் இந்த பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

எதுக்கு மீன் குழம்பு சட்டியை கழுவனும்? ரஜினிக்கு விசிக எம்பி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் செயல்பாடு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் ஒன்று சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால்

"மக்களே.. வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துவிட்டு நாட்டிலேயே இருங்கள்"..! பிரதமர் மோடி.

மக்கள் தேவையில்லாமல் அடிக்கடி வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்த்தால் வைரஸ் பரவுவதை தடுக்கலாம்

ஆந்திராவிலும் நுழைந்த கொரோனா: இத்தாலியில் இருந்து திரும்பிய மாணவருக்கு பாசிட்டிவ்

சீனாவில் தொடங்கி உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது

பிகில், மாஸ்டர் திரைபடங்களுக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? வருமான வரித்துறையினர் தகவல்

தளபதி விஜய் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறை ரெய்டு நடந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் ரெய்டு முடிவடைந்ததாகவும்

தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை??? இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும் கடுமையான