'தோழா' படத்தில் நடித்தது எனது மனைவி அமலாவுக்கு பிடிக்கவில்லை. நாகார்ஜூனா

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடித்த 'தோழா' திரைப்படம் வரும் வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நாம் பார்த்த நாகார்ஜூனா இந்த படத்தில் முழுக்க முழுக்க வீல்சேரில் உட்கார்ந்து முகத்தில் மட்டுமே தனது நடிப்பை கொடுத்துள்ளார். வாழ்ந்து முடிந்த ஒருவர், வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் ஒருவர் என இருவரது மனநிலையை கொடுத்துள்ள படம்தான் தோழா

இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நாகார்ஜூனா, 'உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த படத்தில் நடிப்பதை எனது மனைவி அமலா விரும்பவில்லை. உங்களை வீல்சேரில் என்னால் பார்க்க முடியாது என்று கூறினார். ஆனால் படத்தை பார்த்தால் நிச்சயம் அவர் என்னை பெருமையாகத்தான் நினைப்பார் என நம்புகிறேன். இந்த படத்தில் காதல், காமெடி, நட்பு என அனைத்துமே உள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும் 'தோழா' படம் குறித்து நாகார்ஜூனன் கூறும்போது, 'இந்த படம் பிரெஞ்ச் படத்தின் ரீமேக் அல்ல. அந்த படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இந்திய உணர்வுடன் எடுத்துள்ளோம்' என்று கூறினார்.