மீனாவை வீட்டை விட்டு வெளியேற்றிய முத்து.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடீர் திருப்பம்..!

  • IndiaGlitz, [Sunday,October 22 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியலுக்கு மிகக் குறைந்த நாட்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முத்துவின் சகோதரர் ரவி - ஸ்ருதி திருமணத்தால் அண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு காரணம் மீனாதான் என்று ஒட்டுமொத்த குடும்பமே அவர் மீது பழி போடுகிறது. மீனாவின் கணவர் முத்துவும் அவர் மீது கோபப்பட்டு அவரை அடித்து வெளியே போகச் சொல்லுகிறார்.

இந்த நிலையில் ரவி - ஸ்ருதி வந்தால் மட்டுமே அண்ணாமலையை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியும் என்ற நிலையில் மீனா விடாமல் ரவியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் ரவி தொடர்பு கொள்ளும் அவர் உடனடியாக வர சொல்கிறார், ஆனால் ரவி வர மறுக்கவே, நான் செத்தால் நீங்கள் வந்து தானே ஆக வேண்டும் என்று சொன்னவுடன் ரவி அதிர்ச்சி அடைந்து உடனே ஸ்ருதியுடன் வருகிறார்.

ரவியை பார்த்ததும் முத்து, ரவியை அடிக்க, அப்போது ஸ்ருதி, காவல்துறை அதிகாரியிடம் ’நாங்கள் இருவரும் மேஜர், நாங்கள் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டோம், நான் என் பெற்றோருடன் செல்ல மாட்டேன், ரவியுடன் தான் செல்வேன் என்று கூறியவுடன் அண்ணாமலையை காவல்துறை அதிகாரி விடுதலை செய்கிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை குடும்பத்தினர் காவல் நிலையத்திலிருந்து வீடு செல்லும் போது மீனாவும் பின்னாடியே வர, 'நீ இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என்று முத்து மீனாவை விரட்டி அடிக்கிறார். மீனாவுக்கு இதனால் மிகப்பெரிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்.. 2 வருட தாமதம் ஏன்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரித்த திரைப்படம் ஒன்று, இரண்டு வருடங்களாக திரையரங்குகளில் வெளியிட முயற்சித்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும்

ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. தமிழ் நடிகரின் மகள் நெகிழ்ச்சி பதிவு..!

தமிழ் நடிகரின் மகள் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினியிடம் இருந்து தனது தந்தைக்கு அழைப்பு வந்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கைதி', சர்தார்' படங்களை அடுத்து இன்னொரு 2ஆம் பாகம் படம்.. கார்த்தியின் மாஸ் திட்டம்..!

கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் சர்தார்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி

துர்கா தேவியாக மாறிய ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நவராத்திரி ஸ்பெஷலாக நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவியாக மாறி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

3 நாட்களில் இத்தனை கோடியா? தெலுங்கிலும் மாஸ் வசூல் செய்யும் 'லியோ'

தளபதி விஜய் நடித்த 'லியோ'திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதல் நாளே உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய்க்கு