இசையமைப்பாளர், தயாரிப்பாளரை அடுத்து யுவனின் அடுத்த அவதாரம்1

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும் இசைஞானி இளையராஜாவின் மகனுமான யுவன்சங்கர் ராஜா, தற்போது இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய துறையில் ஜொலித்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து நடந்த விழாவில் பேசிய யுவன்சங்கர்ராஜா ’ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் இயக்குனராக களம் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் இயக்கும் முதல் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் கங்கை அமரன், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் இயக்குனர்களாகி உள்ளனர் என்பது தெரிந்ததே.