தமிழக அரசை கிண்டல் செய்த இசையமைப்பாளர் டி.இமான்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இமான்100' என்ற நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இமான் கலந்து கொண்டு இந்த 100 படங்களிலும் தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.இமான் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'பணி முடிந்த பிறகும் மெட்ரோ ரயிலை இயக்காமல் ஜெயலலிதா வரட்டும் என்று நிறுத்தி வைத்திருந்தவர்கள், அறிவிக்கப்பட்ட விருதையா சீக்கிரமாக கொடுக்கப் போகிறார்கள்' என்று கிண்டலுடன் பேசினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'கும்கி' படத்திற்காக டி.இமானுக்கு 2017ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் விருது வழங்கப்படவில்லை. இதுகுறித்த கேள்விக்கே டி.இமான் மேற்கண்ட பதிலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் விருதை அறிவித்த ஒருசில நாட்களில் அந்த விருதை விருது பெற்றவருக்கு வழங்கிய தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014 வரை 6 ஆண்டுகளுக்கான அறிவிக்கப்பட்ட விருதுகளை எப்போது வழங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா மகள் அறிமுகமாகும் படம்

'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகரை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக பவனிவந்த ராஜசேகரின் மகள் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார்.

கமல்ஹாசனை சந்திக்க வந்த அன்புமணியின் மனைவி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொட

விஜய்சேதுபதியின் 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' பிரஸ்மீட்: சில துளிகள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

மீண்டும் தளபதியுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களையும் விடுதலை செய்யப்படுவார்களா?