கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 1000 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் சென்னையில் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இன்று கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து, இன்று நான் கொரோனா தடுப்பபூசி செலுத்தி கொண்டேன், அதேபோல் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் தாமதம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

More News

சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்ற திருச்சி பெண்... குவியும் பாராட்டு!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15 ஆம் தேதி முதல் தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்?  வைரல் வீடியோ!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சிஎஸ்கே பிளே ஆப் நிலைக்குக் கூட தகுதிப் பெறவில்லை.

பெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வரும் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு: மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை!

அதிமுக, திமுகவை அடுத்து மூன்றாவது அணியாக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ளது

இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி: படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா!

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபகாலமாக வெளிவந்தது என்பது தெரிந்ததே.