சூர்யாவின் 'வணங்கான்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது என்பதும் இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின்அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் அவர் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வணங்கான்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை தெரிவித்து உள்ளார். அதன்படி ‘வணங்கான்’ படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், சூர்யாவின் தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடித்து வருகின்றனர்.

More News

'பொன்னியின் செல்வன்' டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்

'எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கிங்க'.. ரசிகரின் கேள்வியால் கடுப்பான சீரியல் நடிகை ரேஷ்மா!

சீரியல் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டதற்கு கடுப்பாகி,

'கோப்ரா' நிலைமை தெரிந்தும் 3 மணி நேர படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்: என்ன ஆகும்?

சமீபத்தில் வெளியான விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படம் மூன்று மணி நேரம் என்ற நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி

கேம் செயலி மூலம் நூதன மோசடி: கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றிய அமலாகத்துறை!

கேம் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து ரூ.17 கோடி பணத்தை கைப்பற்றியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்: கமல்ஹாசனின் பிக்பாஸ் அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.