மத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்!

மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக டாக்டர் எல்.முருகனை பா.ஜ.க தலைமை அறிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனுக்குச் சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மீன்வளம் தகவல் மற்றும் ஒளிபரப்பு கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பொறுப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஒருவர் மத்திய அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்தது 6 மாதத்திற்குள் எம்.பியாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி தொகுதிகளுக்கு திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் அங்கும் முயற்சி நடைபெற்றது.

ஆனால் என்ஆர்ஐ காங்கிரஸ் ஆதிக்கம் காரணமாக அதுவும் இயலாத நிலையில் தற்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்து எல்.முருகன் மாநிலங்களவைக்குப் போட்டியிடுகிறார். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய இந்தப் பதவிக்கு 22 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் 23 ஆம் தேதி மறுபரிசீலனை செய்து, தேர்தல் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த நீட் தேர்வின் அச்சம் காரணமாக ஏற்கனவே ஒரு மாணவர் மற்றும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்?

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வைவர் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்: ஜிடிவி ராக்ஸ்

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது என்பதும் ஒவ்வொருக்கும் குழந்தைத்தனமாக இல்லாமல் ஒவ்வொரு வரையும் திறமையை சோதிக்க

நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: அதிர்ச்சியில் பெற்றோர்!

கடந்த ஞாயிறன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு எழுதிய 3 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் ஒரு மாணவி தற்கொலைக்கு

'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா அட்லி-ஷாருக்கான் படம்?

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார்