close
Choose your channels

மகன், மருமகள் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையில் 'முந்தானை முடிச்சு' நடிகை!

Tuesday, June 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே பாக்யராஜ் நடித்து இயக்கிய ’முந்தானை முடிச்சு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தற்போது மகன், மருமகள், பேரனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த ’அந்தரங்கம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தீபா. அதன் பின்னர் இவர் ரஜினியின் ’ஜானி’ கமல்ஹாசனின் ’உல்லாச பறவைகள்’ சிவகுமாரின் ’ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் இவரை ’முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பட்டு டீச்சர் கேரக்டர்தான் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ’பட்டத்து ராணி’ என்ற திரைப்படத்திற்கு பின்னர் வேறு தமிழ் படங்களில் தீபா நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தீபா எர்ணாகுளத்தை சேர்ந்த ரிஜாய் என்ற பேராசிரியரை கடந்த 1982ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிர்மல் என்ற மகன் உள்ளனர். தனது மகனுக்கு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து வைத்த தீபாவுக்கு ரிஹான் என்ற பேரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தீபா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment