close
Choose your channels

'முந்தானை முடிச்சு' கிளாமர் டீச்சர் தீபா பாட்டியாகி விட்டாரா? பேரக்குழந்தையுடன்  க்யூட் புகைப்படங்கள்..!

Thursday, April 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே. பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கிளாமர் டீச்சராக நடிப்பில் கலக்கிய நடிகை தீபாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை தீபா கடந்த 1975 ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த ’அந்தரங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் கமல்ஹாசன் உடன் ’உல்லாச பறவைகள்’ ரஜினியின் ’ஜானி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ’முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பட்டு டீச்சர் கேரக்டர் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அவர் கிளாமர் கேரக்டரில் கலக்கினார் என்பதும் குறிப்பாக முதியோர் கல்வி நிலையத்தில் அவர் முதியோர்களின் கையைப் பிடித்துக் கொண்டு எழுத சொல்லி தரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபா கடந்த 1982 ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நிர்மல் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபாவின் க்யூட் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment