கடைசி நிமிடத்திலும் மும்தாஜ் காட்டிய பாரபட்சம்

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு நூலிழை மட்டுமே ஓட்டுக்கள் வித்தியாசம் இருந்ததாக பிக்பாஸ் எழுதி கொடுத்த வசனத்தை நேற்று கமல் படித்து காட்டினார். வழக்கம்போல் மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யாவை பிக்பாஸ் காப்பாற்றியிருந்தாலும் மும்தாஜ் வெளியேற்றபட வேண்டியவர் என்பதால் பார்வையாளர்களுக்கு அதிருப்தி ஏற்படவில்லை

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது, மும்தாஜ், ரித்விகாவிடம் 'தமிழ்ப்பொண்ணு தான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டாம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று அறிவுரை சொன்னார். ஆனால் இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவரையும் கவனமாக பார்த்து கொள்ளுமாறும் இருவரையும் பிரித்துவிட வேண்டாம் என்றும் மற்ற போட்டியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறிய கடைசி நிமிடம் வரை இருவரிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தினார். இந்த அன்பாவது உண்மையா? என்பது அவரது மனச்சாட்சிக்கு மட்டுமே தெரியும். அனைத்து போட்டியாளர்களையும் சமமாக மதிக்காமல் யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் மட்டும் அதிக அன்பு காட்டி விடைபெற்ற மும்தாஜ், ரித்விகாவிடம் பேசிய பாரபட்சமான கருத்து நெட்டிசன்களிடையே விவாத பொருளாகியுள்ளது.

இந்த நிலையில் மும்தாஜின் வெளியேற்றத்திற்கு பின்னர் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஆறு பேர் இருப்பதாலும், இறுதி போட்டிக்கு இன்னும் இடையில் ஒரு வாரம் மட்டுமே இருப்பதாலும், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜனனி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இரண்டு பேர் வெளியேறியது போக மீதி மூன்று பேர் ஜனனியுடன் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனனியுடன் இறுதி போட்டியில் ரித்விகா மற்றும் யாஷிகா பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இன்னொருவர் விஜயலட்சுமியா? ஐஸ்வர்யாவா? பாலாஜியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஐஸ்வர்யா-மும்தாஜுக்கு கிடைத்த அமைதியும் ரித்விகாவிற்கு கிடைத்த ஆர்ப்பாட்டமும்

ஒரு போட்டியாளருக்கு மக்களின் மத்தியில் மதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சனி, ஞாயிறு தினத்தில் பங்கேற்கும் ஆடியன்ஸ்களிடம் இருந்து வெளிப்படும் அமைதி, ஆர்ப்பாட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் நேற்று நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையை கூறி விமர்சனம் செய்தார்.

விரைவில் வெளியாகிறது சில்க் ஸ்மிதாவின் கடைசி படம்

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா, வினுசக்கரவர்த்தியின் 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின்னர் கோலிவுட் திரையுலகில் பெரும் புகழ் பெற்றார்.

தொடர்ச்சியாக வெளிவரும் பெரிய ஸ்டார்களின் படங்கள்: ரசிகர்களுக்கு விருந்து

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் நிலையில்

ஜிவி பிரகாஷ்-ஆதிக் படம் 'நித்தியானந்தா' கதையா?

த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'காதலை தேடி நித்யா நந்தா' என்பதை நேற்று பார்த்தோம்