மும்தாஜை கதறி அழவைத்த செண்ட்ராயன்

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோ வீடியோவை தான் நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதற்கு கிடைக்கும் ஆதரவும் பதிவு செய்யப்படும் கமெண்ட்டுகளும் இதனை உறுதி செய்கிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த புரமோ வீடியோவில் 'குஷி' படத்தில் இடம்பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடலுக்கு மும்தாஜூம், செண்ட்ராயனும் டான்ஸ் ஆடுகின்றனர். தான் மும்தாஜூடன் டான்ஸ் ஆடிவிட்டதாக செண்ட்ராயன் பெருமையாகவும் கூறுகிறார்.

ஆனால் திடீரென என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மும்தாஜ் கதறி கதறி அழ, அவரை அனைவரும் தேற்றுகின்றனர். செண்ட்ராயனை அனைவரும் திட்ட, ஒருவர் மட்டும் வெளியே போ என்று செண்ட்ராயனை விரட்டுகிறார். ஆனால் இந்த புரமோவில் சேர்ந்து வரும் காட்சிகள், நிகழ்ச்சியில் தனித்தனியாக வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை முறை இதை போல் ஏமாந்திருப்போம். இருப்பினும் 'டார்லிங்' மும்தாஜ் கண்ணீர் அவரது ஆர்மியினர்களை வருத்தமடைய செய்துள்ளது என்பது இந்த புரமோ வீடியோவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கமெண்ட்டுக்களில் இருந்து தெரியவருகிறது.

More News

ஆரவ்வுடன் மீண்டும் காதலா? வைரலாகும் ஓவியா புகைப்படம்

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக  வேண்டுமானால் ஆரவ் இருக்கலாம்

தளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்

தளபதி விஜய் பிறந்த நாள் நாளை அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.

தற்கொலை செய்து கொள்ள போகிறேன்: பிக்பாஸ் வீட்டில் கதறும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி, முதல் பகுதி போல் விறுவிறுப்பாக இல்லை என்றும், போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் அது உண்மை

வீரப்பனை பிடித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு காஷ்மீரில் முக்கிய பணி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தனது ஆதரவை விலக்கி கொண்டதால் மெகபூபா முப்தி ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் அம்மாநிலத்தில் தற்போது ஆளுனர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டுள்ளது

ராகுல் காந்தியை அடுத்து சோனியாவை சந்திக்கும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகியும் எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை என்று குற்றம் சொல்லும் நபர்கள் வாய்பிளக்கும் வகையில் அவருடைய சமீபத்திய செயல்கள் உள்ளது.