நாயின் ஆணுறுப்பை வெட்டி, துண்டு துண்டாக்கிய சைக்கோ சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், தெருவில் சுற்றித்திரிந்த ஒரு நாயின் ஆணுறுப்பை வெட்டி அதை சிதைத்த மர்ம நபர் குறித்த தகவல் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் என்னவிதமான மனநிலையை காட்டுகிறது? என விலங்குநல ஆர்வலர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கபஸ்வாடியில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றின் ஆணுறுப்பை மர்ம நபர் யாரோ வெட்டியுள்ளனர். இதனால் ரத்தம் சொட்டச்செட்ட கடும் அவதிப்பட்ட அந்த நாயை, சில விலங்குநல ஆர்வலர்கள் பரேல் பகுதியில் உள்ள SPCA கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதைத்தொடர்ந்து நாய்க்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தை யார் செய்தது என்பது தெரியாததால் தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்பு மனித உறவில் ஏற்படும் கள்ளக்காதல், வலுக்கட்டாயமாக உறவுக்கு வலியுறுத்துதல் போன்ற சமயங்களில் ஆண்களின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த சம்பவம் நடைபெற்றருக்கின்றன. ஆனால் முதல் முறையாக வாயில்லா அப்பாவி நாய் ஒன்றின் ஆணுப்பை யாரோ ஒருவர் வெட்டியெறிந்து அதை சிதைத்திருக்கிறார். இதனால் கபஸ்வாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் இதுகுறித்துப் பேசிய விலங்குநல ஆர்வலர்கள், விலங்குகளை அச்சுறுத்துவது ஒரு வளர்ந்த சமூகத்தில் என்னவிதமான மனநிலையைக் காட்டுகிறது என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் விலங்குகளை துன்புறுத்தும் செயலுக்கு தற்போதுவரை PCA 1960 சட்டமே பயன்படுத்தப்படுகிறது. இதன்படி விலங்குகளை துன்புறுத்தினாலோ அல்லது அடித்தாலோ வெறும் 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் போதுமானது. எனவே இந்தச் சட்டத்திருத்தத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More News

120 மணிநேர ரெய்டில் 250 கோடி ரொக்கம்… இந்தியாவையே கதிகலங்க வைத்த தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த வியாபரி ஒருவரின் வீட்டில்

என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? ரசிகரின் கேள்விக்கு அஞ்சனாவின் கூல் பதில்!

தொலைக்காட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா ரங்கனிடம் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு

மேலும் ஒரு தமிழ் இயக்குனருக்கு கொரோனா: அதிர்ச்சியில் படக்குழுவினர்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் திரையுலகினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

பாவனியை அழவைத்தது யார்? முட்டி மோதிய ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று நடைபெற்ற முதல் கட்ட டாஸ்க்கில் நிரூப் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

தள்ளிப்போகிறதா எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்.?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்' வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்