முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.. முன்னாள் மனைவியான பிரபல நடிகை திடுக் குற்றச்சாட்டு..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டில் பிரபல நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நடிகர் முகேஷ் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் நிலையில் அவருடைய முன்னாள் மனைவி சரிதாவும் சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் பல பெண்களுடன் தொடர்புகள் வைத்திருந்தார், சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சி போலவே எனக்கு நிஜத்திலே நடந்தது, முகேஷால் நான் அனுபவித்த கொடுமைகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு முறை ஓணம் பண்டிகையின் போது நான் கர்ப்பமாக இருந்த நிலையில் அந்த நேரத்தில் கூட என்னுடன் முகேஷ் சண்டை போட்டு என்னுடைய வயிற்றில் எட்டி உதைத்தார். அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன், அதை பார்த்து நீ நல்ல நடிகை, நன்றாக நடிக்கிறாய் என்று சொல்லி சிரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகேஷ் எப்போதும் இரவில் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவார், ஏன் இப்படி வருகிறீர்கள் என்று கேட்டதற்கு என்னுடைய தலைமுடியை பிடித்து கீழே தள்ளிவிட்டார். அதன் பின்னர் அவர் கொடுமை தாங்காமல் தான் அவரை விட்டு வெளியேறி விவாகரத்து செய்ய முடிவு செய்தேன் என்றும் தெரிவித்தார்.

முகேஷ் நடவடிக்கைகளை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவருடைய தந்தை தான் என்னிடம் சத்தியம் வாங்கினார் என்றும் அவர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் தான் இதையெல்லாம் நான் வெளியே சொல்கிறேன் என்றும் நடிகை சரிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.