நடைபாதை வியாபாரிகள் முதல்… அதிமுக தேர்தல் அறிக்கையை பாராட்டி வருவதாகக் கருத்து!

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையைக் குறித்து பல முனைகளில் இருந்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருவதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது. அதிலும் நடைபாதை வியாபாரிகள் முதல் சிறுகுறு தொழில் முனைவோர்கள் இத்தேர்தல் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லா சுழல் நிதி, வணிகர்களுக்கு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறு குறுதொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சலுகை 250 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வியாபாரிகளிடையே வரவேற்பு பெற்று இருப்பதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது.

மேலும் இத் தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 ஆயிரம் வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் சிறுகுறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரை திறனாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய திட்டங்களினால் சிறு வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் புரிபவர்கள் வரை அனைவரும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி வரவேற்பு அளித்து வருவதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது.

 

More News

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல இசையமைப்பாளர்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 1000 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டனர்

சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்ற திருச்சி பெண்... குவியும் பாராட்டு!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15 ஆம் தேதி முதல் தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்?  வைரல் வீடியோ!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சிஎஸ்கே பிளே ஆப் நிலைக்குக் கூட தகுதிப் பெறவில்லை.

பெண் கொடுத்த புகாரால் சர்ச்சையில் சிக்கிய பாக். நட்சத்திர கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வரும் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

நீட் தேர்வுக்கு பதில் சீட் தேர்வு: மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை!

அதிமுக, திமுகவை அடுத்து மூன்றாவது அணியாக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ளது