சுஷாந்த்சிங் மறைவால் 'தோனி 2' படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவால் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இல்லாமல் ’தோனி 2’ படம் குறித்த அறிவிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சுஷாந்த்சிங் வெகு அருமையாக நடித்திருப்பார். இந்த படத்திற்காக அவர் மிக அதிகமாக கடின உழைப்பை செய்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கிரன்மோரே அவர்களிடம் தோனியை போல் விக்கெட் கீப்பிங் செய்வதற்கும் பேட்டிங் செய்வதற்கும் பயிற்சி எடுத்த சுஷாந்த்சிங், அடிக்கடி தோனியை சந்தித்து அவருடைய மேனரிசத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தார்.

மேலும் இந்தப் படம் தனது வாழ்க்கையில் மிக முக்கிய படம் என்பதை உணர்ந்திருந்த சுஷாந்த்சிங் அந்த படத்திற்காக தனது அதிகபட்ச உழைப்பை கொட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோனி படத்தின் இணை தயாரிப்பாளரும் தோனிக்கு நெருங்கிய நண்பருமான அருண் பாண்டே என்பவர் கூறியபோது தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்த முயற்சி எடுத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த முயற்சியை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.

சுஷாந்த்சிங் இல்லாமல் ’தோனி 2’ படத்தை உருவாக்கவே முடியாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக கூறிய அருண்பாண்டே, சுஷாந்த்சிங் உயிருடன் இருந்து ’தோனி 2’ திரைப்படம் உருவானால் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் என்றும், அந்த பாக்கியம் இனி இல்லை என்றும் கூறியுள்ளார்.

More News

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: ராணுவ வீரர் பழனி மறைவு குறித்து கமல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்களும் 5 சீன வீரர்களும் உயிரிழந்தனர்

'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனருக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

கொரோனா வைரஸ் லாக்டவுன் அறிவிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்'. சுமார் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரூபாய் 60 கோடிக்கு மேல்

தனுஷூக்கு இருந்த பிரச்சனை சுஷாந்த் சிங்கிற்கு இருந்ததா? பிரபல எழுத்தாளர் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே குலுக்கியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

உறவினரின் வளைகாப்புக்கு புதுவை சென்று வந்த சென்னை நபர் கொரோனாவுக்கு பலி!

புதுவையில் உள்ள உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது 

லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலி: 11 வீரர்கள் காயம் என தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒன்றில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியையும் அதில் ஒருவர் இராணுவ அதிகாரி